Showing posts with label Seema Malakaya. Show all posts
Showing posts with label Seema Malakaya. Show all posts

Tuesday, December 4, 2012

புராதன கலை நயத்துடன் Beira ஏரிக்குள் நவீன ஆலயம்

நான்கு பக்கமும் தண்ணீர் சூழ சிறிய தீவாக அமைந்திருப்பது இலங்கை. இத் தீவிற்குள் ஒரு குட்டித் தீவாக கொழும்பு மாநகரில் அமைந்துள்ளது Beira lake..


Beira Lake இல் அமைந்துள்ள இந்த Seema Malakaya கோயிலை 1985ம் ஆண்டு திரு Geoffrey Bawa வடிவமைத்தார்.

இது சிறிலங்கன், தாய், இந்தியன், சைனா கட்டடக் கலைகள் கலந்த கலைநுட்பம் நிறைந்த சிறிய மண்டபம். கலை நயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.   

இரண்டு மணடபங்கள் அடங்குகின்றன. முதலாவதும் பெரியதுமானது மக்கள் கூடும் இடமாக அமைந்துள்ளது. மற்றது பெளத்த பிக்குகளின்  பயிற்சி மற்றும் தியான மண்டபமாக இருக்கின்றது.


வாயிலில் பாத பகொடா Pada Pagoda


முன் முகப்பில் புத்தரின் சயன உருவம் சிலையாக வடிக்கப்பட்டு வரவேற்கிறது. மண்டப மரவேலைப்பாடுகள் வியக்க வைக்கின்றன.



மரத்தாலான அழகிய மண்டபம் அமைக்கப்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து இழுத்து நிற்கிறது.

மிக அழகிய மண்டபத்தின் தோற்றம் தூரத்தே வரும்போதே வா வா என அழைத்து வரவேற்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிரதானமாக வந்து பார்த்துச் செல்லும் பிரசித்தமான இடமாக மிளர்கின்றது.


சாதி ,மத வேறுபாடின்றி மக்கள் பலரும் வந்து தர்சித்துச் செல்கின்றார்கள். பிரபல தொழில் அதிபர் அமீர்முசாஜி அவர்கள்  வெண்சிங்கச் சிற்பத்தை வழங்கி இருக்கிறார்.


பிராத்தனை மண்டபத்துடன் நூதனசாலையும், நூல்நிலையமும் அமைந்துள்ளன.  சுற்றிவரும் பாதையில் இருந்து வலதுபுறம் மரப்பாலம் அமைத்து சத்தியத்தின் பொக்கிச சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இருபுறமும் நீர் ஓட சிறிது தூரம் நடந்து சென்று மண்டபத்து வாசலை அடைகின்றோம்.


வாத்துக்கள் ஒரு புறம் நீச்சலடிக்கின்றன. கூளக்கடாக்கள் பறந்து திரிகின்றன. இரு கைகளையும் நீட்டி அவற்றைப் பிடிக்க தோன்றுகிறது.

 குளிர் காற்று நம்மை சிலிர்க்க மண்டப வாயிலின் இருபுறமும் உள்ள வெண்சிங்கங்களின் அழகில் கிறங்கி நிற்கின்றோம்.


மண்டப வாயிலின் நடுநாயகமாக அரைசந்திர வட்டக்கல் அமைந்திருந்து வரவேற்கின்றது.


அதை ஒட்டி  பெண்சிலைகள் ....


......இருபுறம் நிற்கும் படிகளில் ஏறிச் சென்று மண்டபத்தை அடையலாம்.


மரவேலைப்பாட்டு மண்டபத்திலிருந்து உள்ளழகையும், வெளியேதெரியும் ......


.........ஏரியினதும் கொழும்பு மாநகரினதும் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

உள்ளே நடுநாயகமாக  கண்ணாடிப் பெட்டிக்குள் அழகிய புத்தர் சிலை.


இருபுறமும் உருவங்கள். கல்லால் ஆன யானைகள்,


பழையகால கற்சிற்பம் ............


.........என பலவும் இருக்கின்றன.


வணங்கி வெளியே வருகின்றோம். வெளியில் மண்டபத்தைச் சுற்றி அழகிய பாதை.

தியானமிருக்கும் கௌதம புத்தரின் வெண்கலச் சிலைகள் பலவித முத்திரைகளுடன் வரிசையாக பாதையைச் சுற்றி அமைந்திருந்து நம்மையும் கலை நயத்தில் திளைக்க வைக்கின்றன.

பாதையிலிருந்து சுற்றிவர இருக்கும் கட்டிடங்கள், .......



பசிய உயர்ந்த மரங்கள். ஓடும் நீர் அருகே இருக்கும் குட்டித் தீவுப்பூங்கா, தூரத்தே வீதியில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள், ....


 நீரில் நீந்தும் வெண்நிற வாத்துக்கள், நீர்க்காகங்கள், பறவைகள், காகங்கள்


என சுற்றுப்புறம் நம்மை ஒரு வெளி உலகிற்கு அழைத்து மகிழ்வைத் தருகின்றன.

ரசித்தபடி பாதையைச்சுற்றி வந்து மீண்டும் முகப்பிற்கு வருகின்றோம். முகப்பின் இடதுபுறம் பாதைக்கு மேலே படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.


ஏறிச் சென்று மரத்தின் கீழ் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலையை வணங்கலாம்.

 பிள்ளையாரும் ஒருபுறம் சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.



அனுராதபுரகால பாரிய சிலையும் ஒன்று உயர்ந்து நிற்கிறது.


மறுபுறம் முருகன் ஆறுமுக ஸ்கந்தனாக,


இன்னோர் புறம் கோழி வாகனத்தின் மேல் கிருஷ்ணர், கோழி ஒன்றும் கூடவே தூங்குகின்றது.

 வைரபர்,..

இவற்றையெல்லாம் கண்டு களித்துக் ......

...கீழே இறங்கி மரப் பாதையால் வெளிவந்து லேக் ஓரமாக பாதையில் நடக்கின்றோம்.

Beira Lake இல் உள்ள சீமா மாலகய கோவிலைப் பற்றிய வீடியோவைக் கீழே காணலாம்.  Uploaded by safarifox 2010.


அடுத்து லேக்கையும் குட்டிப் பூங்காவையும் கண்டு களிக்க வாருங்கள்....