Thursday, March 20, 2014

தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்

நின்றபடியே இருப்பான் நன்மைகளைச் செய்வான். அவன் யார்?

Thanks :- en.wikipedia.org
முற்காலத்தில் மரங்களைத் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். கோவில்களில் தல விருட்சங்கள் நின்று சிறப்புற்றன. சிவனுக்கு உகந்ததான உருத்திராக்க மரம் வில்வ மரங்கள், நாகலிங்க மரங்கள் அமைந்திருந்தன.

Thanks:- ta.wikipedia.org 
விஷ்ணுவிற்கு துளசிச் செடியும், பிள்ளையாருக்கு எருக்கலை மரமும், அறுகம் புல்லும். அம்மனுக்கு வேப்பமரமும் இலையும், கொன்றையும் சிறப்பாக வைத்து வணங்குகின்றார்கள்.

இரவில் ஒட்சிசனை வெளியேற்றும் தாவரங்கள் அரச மரமும்; துளசிச் செடியும் ஆகும்.

கொம்பஸ் செடி என்று அழைக்கப்படும் திசைகாட்டும் செடி ஒன்று வட ஆபிரிக்க நாட்டில் இருக்கிறது. சில்பியம் லெசினியேட்டம் (Silphium laciniatum)
என்ற செடி. இந்தச் செடி 6 அடி உயரம் வரை வளரக் கூடியது. தண்டின் அடிப்பகுதிகளில் நிறைய இலைகள் காணப்படும். மேலே செல்லச் செல்ல இலைகள் குறைந்து கொண்டே செல்லும்.

Thanks :- fjordnaer.com
இந்த இலைகள் எதிர் எதிராக மொரமொரப்பாக இருக்கும். இந்த இலைகள் வடக்கும் தெற்குமாகவே எப்பொழுதும் இருக்கும். அதனால் திசை காட்டும் செடி என்கிறார்கள்.

6000 ஆண்டுகள் வரை வாழக் கூடிய மரங்களும் இருக்கின்றனவாம். இவ்வகை மரங்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. இம் மரங்கள் பிரிஸில் கோர்ன் எனப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 9000 அடிக்கு மேல்தான் இம் மரங்கள் வளர்கின்றன. உலகிலேயே பெரிய மரமும் உயரமான மரமும் இங்குதான் இருக்கின்றன. பெரிய மரம் அடிப்பாகத்தில் 101 அடி சுற்றளவைக் கொண்டதாக இருக்கிறது. உயரம் 272 அடி. சுpல மரங்கள் 366 அடி உயரத்தையும் கொண்டிருக்கின்றன.

உலகின் மிக மூத்த மரம் நோர்வே ஊசியிலை மரமாகும். சுவீடனில் இம்மரம் உள்ளது. இது 9550 ஆண்டுகள் முதிர்ந்ததாம்.

பிரேசில் நாட்டில் jabuticaba என்ற மரம் இருக்கின்றது. இதன் பழங்கள் பிரேசில் திராட்சை என்று அழைக்கப்படுகிறது. திராட்சை போல குலையாகக் காய்ப்பதில்லை. பழங்கள் மரத்தின் தண்டுகளில் காய்க்கின்றன. மரத்தின் அடியிலிருந்து உச்சி வரை அனைத்துத் தண்டுகளிலும் பழங்கள் காய்த்து இருக்கும்.

Thanks :- timanseeuw.wordpress.com
இப்பழத்திலிருந்து வைன் தயாரிக்கிறார்கள். இதன் வைன் பிரபல்யமாக இருக்கின்றது.

சிட்டினியில் ஒலிம்பிக் பார்க் அருகாமையில் homebush bay என்ற இடத்தில் உலகப் போரின் போது உபயோகித்த கப்பல் இங்கே அனாதரவாக விடப்பட்டு இருந்தது.

Thanks :- www.mymodernmet.com
நாளடைவில் இக்கப்பலில் செடிகள் முளைத்து வளர்ந்து பெரிய மரங்களாக வளர்ந்துவிட்டன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றார்கள். அதை மிதக்கும் காடு floating forest  என அழைகின்றார்கள்.

மூங்கில் புளியை முதிரை
நிகழ்வாகை
சேர்ந்தடைந்த காட்டில்
சிறுபறவைக் கூட்டமாய்
வாழ்ந்து வந்தோம் நாங்கள்
காட்டுத் தீ மூட்டும்
கலைதேர்ந்த மேதைகளே
கூட்டுக்குள் கத்தும் எங்கள்
குஞ்சுகளுக்கு இரை தேடி
தூரப் பறந்த துணைவன்
உணவோடு கூடு வருமுன்னே
கொல்லும் நெருப்பள்ளி
போடுவீர்.

பாதை புதிது கவிதைத் தொகுதியில் மு.சடாச்சரன் இக்கவியை தருகின்றார்.

நேற்றும் பத்திரிகைச் செய்தி இலங்கையில் பரந்த மலைக் காடுகளாகத் திகழும் சிங்கராஜ தெனியாயப் பகுதிகளில் 25 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம். யாரோ விசமிகள் வைத்த தீயாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

உலகளாவிய ரீதியில் காட்டு மரங்களை அழிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.காடழித்தலைத் தடுப்போம். மர நடுகையை முன்னெடுப்போம்.

Thanks :-   en.wikipedia.org
இலங்கையிலும் மரநடுகை திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். சிங்கராஜ கன்னெலிய பகுதிகளில்1000 ற்கும் அதிகமான மரங்களை நடும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Thanks :- o.canada.com 
வீடுகளிலும் நாட்டி மகிழ்வோம். கோடையைக் குளிர்விப்போம். உலக நலன் பெறுவோம்.

0.00.0

12 comments:

  1. மரங்கள் பத்தின நிறைய புதுத் தகவல்கள் இப்ப உஙக மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். மரத்தண்டுகள்ல ஆரம்பிச்சு பழங்களா காய்ச்சிருக்கற மரமும் அந்தப் பழங்கள்லருந்து வைன் தயாரிக்கறாங்கன்ற தகவலும்.. அட! உலகப்போர்ல பயன்பட்ட அந்தக் கப்பல் படமும் மிக ரசித்தேன். மரங்களைக் காப்போம்..!

    ReplyDelete
  2. தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் மரங்களைப்பற்றிய செய்திகள் படங்கள் எல்லாம் மிக அருமை. கவிதை அருமை.
    இயற்கையை போற்றுவோம். வனங்களை காப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
    மரங்களை வளர்த்து மழை பெறுவோம். கோடையை குளிர்விப்போம்.
    நன்றி மாதேவி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. படங்களும் தகவல்களும் அற்புதம்...

    சிறப்பான கருத்துகளுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  4. கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி தந்துப்போகும்
    அற்புதமான பகிர்வு
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள் -ரம்யமாக
    உலக வன தினத்தைக்கொண்டாடிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. கண்ணுக்கு இனிமையான படங்களுடன் கருத்துக்கு இனிமையான பதிவு! இதுவரை தெரியாத விஷயங்கள்! வாழத்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  7. சிறப்பான பதிவு. மரங்களின் தண்டுகளில் கூட பழங்கள் காய்ப்பது இது வரை பார்த்ததில்லை.

    ReplyDelete
  8. சிறப்பான படங்களும் பகிர்வும்.

    ReplyDelete
  9. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவுகள் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  10. பதிவு மிக நன்று சகோதரி.
    படங்களும் நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. மகிழ்கின்றேன்.

      Delete