Wednesday, November 12, 2008

மற்றொரு வருகை

நாலு மாதங்கள் கூட ஆகவில்லை. தயிர் அவலோடு உங்களை சாப்பாட்டு விருந்துக்கு அழைத்து. இப்பொழுது சற்று தைரியம் வந்துவிட்டது, வேறும் ஏதும் எழுதலாம் என்று.

எதை எழுதுவது எனத் திட்டம் ஏதும் இல்லை. ஆயினும் சொல்வதற்கு விடயங்களுக்கும் வார்த்தைகளுக்கும் பஞ்சமா? நெஞ்சமெல்லாம் நிறைந்து கிடக்கிறதே.

படித்ததில் ரசித்ததை, பார்த்ததில் நெகிழ்ந்ததை, உள்ளத்தைக் குடைந்ததை. இவற்றை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மற்றொரு வருகை இது.

"மூட்டைப் பூச்சியால
மூட்டை தூக்க முடியாது

பட்டாம் பூச்சியால பட்டம்
விட முடியாது."

" ஒரு எறும்பு நினைச்சா 1000 யானையை
கடிக்க முடியும். ...ஆனா 1000 யானை
நினைச்சாலும் ஒரு எறும்பை
கடிக்க முடியாது"

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இவை இருக்கிறம் 05.10.2008 இதழில்
வெளிவந்த இரு ஜோக்குகள்.

அல்லது படிப்பினையா?

இந்த இதழில் குசேலன் திரைப்படம் பற்றி ஒரு கட்டுரை
வந்துள்ளது. ஓர தொழில் முறை கொலைகாரனின் படம் என
தலைப்பிடப்பட்டுள்ளது.

'எழுத்தாளர் சுதேசமித்திரன் அம்புருதா பெப்ரவரி 2008 இதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இதாம்.

கானா பிரபாவின் 'ஓய்ந்துவிட்ட கான சுரம்' மறைந்த நாதஸ்வர மேதை கானமூர்த்தி பற்றிய பதிவு மிக அருமையாக 'இருக்கிறது.'

மருத்துவம், அனுபவம், சிறுகதை, சினிமா, ஜோக்ஸ் என வாசிப்பதற்கு சுவையாக இருக்கிறது 'இருக்கிறம்'

தொடர்புகளுக்கு

இருக்கிறம்
3, டொரிங்டன் அவனியூ
கொழும்பு 07.

:- மாதேவி -:

2 comments: