பாடசாலைகள், நூல்நிலையம், கோயிற் பணிவேலைகள் என ஊரின் முக்கிய வேலைகளில் முன்நின்று வந்த பிரபலமான ஒருவர்தான் எனது அப்பா.
மிகவும் அன்பானவர். அதே நேரம் கண்டிப்பையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடித்தவர். எங்களிலும் எதிர்பார்ப்பவர்.
சிறுவயதில் தந்தை தாயாரை இழந்து விட குடும்ப பாரம் சுமந்தவர். தனது அயராத முயற்சியால் முன்னேறி தென் பகுதியில் வியாபாரம் செய்து நல்ல நிலையில் இருந்தார்.
சத்தம் போட்டுப் பேசத் தெரியாத மிகவும் சாதுவான அம்மா.
இவர்களுக்கு நண்டு சிண்டுகள் என எத்தனை எனக் கேட்கப்படாது....
ஆனால் குசேலர் வீடு அல்ல.
அப்பாவிற்கு கட்டுப்பட்டே அனைவரும் வளர்ந்தோம். பிள்ளைகளுக்கு இடையே பதின்மத்தின் கீழ் வயதில் கூட சண்டைகள் வருவதில்லை. ஒட்டுறவுவோடுதான் இருந்தோம்.
இதில் கடைக்குட்டியாக நான்.
உருப்பட்ட மாதிரித்தான் எனச் சொல்வது கேட்கிறது.
அக்கா ஒருவர். ஏனையோர் அண்ணாமார்தான்.
அக்காவிற்கும் எனக்குமான வயது வித்தியாசம் 10. என் மீது மிகுந்த அன்பானவர். கூடிய வயது இடைவெளியே எம்மை நன்கு பிணைத்தும் இருக்கலாம்.
சிறுவயதில் எனக்கான உடைகளை தானே தைத்து எனக்குப் போட வைத்து அழகு பார்ப்பார் அக்கா.
எனது பதின்ம வயதிற்கு எட்ட முன்பே அக்காவின் திருமணம் நடைபெற்றது. நம் ஊர் வழக்கப்படி பெண்கள் திருமணத்தின் பின்பு அப்பா அம்மாவுடன்தான் வசித்து வருவார்கள். அம்மம்மாவும் எங்களுடனேயே இருந்தார்.
பெண்ணிற்குத்தான் வீடு பண்ட பாத்திரங்கள் கொடுப்பார்கள். அதிலேயே போண்டியாகி விடுவார்கள் பலபேர்.
ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இல்லை. ஆண்கள் திருமணம் முடித்து பெண் வீட்டிற்கே போய் விடுவார்கள். இப்பொழுதும் இந்த வழக்கம்தான் இருக்கிறது. ஆனால் என் அப்பாவை ஆண்பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுத்தவர் என சிலர் சீண்டுவார்கள்.
மாமனார் மருமகன் கொடுமை இருந்ததாகத் தெரியவில்லை :)
இம்முறைப்படி அக்காவும் அத்தானும் எங்களுடனேயே ஒரு வருடம் இருந்தார்கள். அப்பா அவர்களுக்கு நமது வீட்டுக்கு அருகே புதிய வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கட்டி முடிந்ததும் அவர்கள் அங்கே குடி போனார்கள்.
அத்தான் வெளி ஊரில் வேலை என்பதால் அக்காவிற்கு உதவியாக அம்மம்மா பெரும்பாலும் அங்கேயே இருப்பார்.
அக்காவும் தனியே சென்றுவிட வீட்டு ராணி யாரென உங்களுக்குப் புரிந்திருக்கும்.
இருந்தாலும் அதட்ட அடம்பிடிக்க மாட்டேன். நல்ல பிள்ளையாகவே இருப்பேன். சந்தேகம் என்றால் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பாருங்களேன்.
எல்லாம்தான் கிடைத்துவிடுமே. பிறகு ஏன் பிரளி செய்வான் என எண்ணம். :)
அண்ணாமார்களும் தங்கையின் மேல் உயிராக இருந்தார்கள் எனச் சொல்ல வேண்டியதில்லை.
பத்து வயதுவரை எங்கள் வீட்டில் இருபுறத்து வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கும். ஒரு வீட்டியிலிருந்து மற்றதற்கு தவழ்ந்து சென்று வரக் கூடிய பொட்டுக்கள்.
கீரிப்பிள்ளை போல அவற்றிற்குள்ளால் நுழைந்து ஒவ்வொரு வீடுகளாய் கடந்து ஐந்தாம் வீட்டில் உள்ள ராஜன் தம்பி வீடுவரை சென்று விளையாடி வருவேன்.
அவர்களும் அவ்வாறே தவழல்தான் தெருவால் சுற்றிப் போகும் வழக்கம் எல்லாம் இருந்ததில்லை. அணில்கள் போல எல்லோருக்கும் பொட்டுக்களே பாதைகளாக இருந்தன.
இடைப்பட்ட வீடுகளில் பிள்ளைகள் இல்லை. இருந்தும் அன்னியோன்யமாக அனுமதித்திருந்தார்கள்.
ராஜன் வீட்டு நெல்லிக்காய் கொய்யா மரம் ஏறுவதிலிருந்து மாமி வீட்டு விளாம் பழம், கமலா அக்கா வீட்டு ஆட்டுக் குட்டி, மாட்டுக் கன்றுவரை குறுமன்களுக்குத்தான் சொந்தமாக இருந்தன.
லீவு நாட்களில் அண்டை அயலிலுள்ள பிள்ளைகள் எல்லாம் கூடி விளையாடுவோம். மாபிள் குண்டு, கிரிக்கற், கிளித்தட்டு, சடுகுடு, உயரம் பாய்தல் எனத் தொடர்ந்தது. தென்னை மரங்களில் கட்டிய ஊஞ்சல்கள் .....
கிளிசரியா மரத்துப் பொன்வண்டுகள் எமது நெருப்புப் பெட்டிக்குள் சிறையாவர்கள்.
தும்பி, தம்பளப் பூச்சி யாவும் கைக்குள் அடங்கின.
மயில் இல்லாவிடினும் அவற்றின் சிறகுகள் புத்தகங்களுக்குள்.
வீட்டு முற்றத்திலேயே பூங்காவனம், தேர்த் திருவிழாவிற்கும் குறைவில்லை. மேளக் கச்சேரி, கதாப்பிரங்கம் வில்லுப்பாட்டு என தொடர்கதையாக நடைபெறும்.
சின்ன மேளம் என பையன்கள் ஆட்டமும் போடுவார்கள்.
இதில் குண்டாக நல்ல வளர்த்தியாக சிவத்தப்பையன் ஒருவன் இருப்பான். புதிய கோலிக் குண்டுகள் வைத்திருப்பான் முகம் சுளிக்காமல் எங்களுக்கும் தருவான்.
மிகவும் நல்ல உள்ளம் அவனிடத்தில் இருந்தது. எல்லோருடனும் சிரிக்கப் பேசி எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான். ஒருவருடனும் சண்டைக்குப் போக மாட்டான். எல்லோருக்குமே அவனைப் பிடித்திருந்தது.
அடிக்கடி வருத்தம் வரும் அவனுக்கு. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பான். பின் சுகமாகி வீடு வந்ததும் விளையாட வந்துவிடுவான். நாங்கள் மகிழ்ந்திருப்போம்.
வழமையாகப் இப்படியாகச் சென்று அட்மிட் ஆகி திரும்பி வரும் அவன் ஒரு முறை மீண்டும் விளையாட வரவேயில்லை.
"அவன் வயிறு வீங்கி ஆஸ்பத்திரியிலேயே செத்துவிட்டான்" என்று அண்ணா கூறினார்.
அதுதான் முதல் கேட்ட சாவு இடியாக இருந்தது.
இவனைப் புதைப்பார்களா? ஏரிப்பார்களா? என்ற கேள்வி சிறுசுகள் எல்லோருக்கும் எழுந்தது.
"எரித்தால் அவனுக்குச் சுடாதா?" எனக் கேட்டேன்.
செத்த வீட்டுக்குப் போகவிடமாட்டார்கள்.
அன்று மரண ஊர்வலத்தை ஒழித்து நின்று களவாகப் பார்க்க முடிந்தது. பாவம் அவனெனக் கூறி அழத்தான் முடிந்தது எங்களால்.
நீண்டகாலமாக மாபிள் விளையாட்டை விளையாட மனமே வரவில்லை. அவன் எங்களுக்குத் தந்திருந்த புதிய மாபிள்க் குண்டுகள் எப்போதும் அவன் நினைவை எழுப்பிக் கொண்டே இருந்தன.
ஒரு நல்ல நண்பனை இழந்த சோகம் எல்லோர் மனங்களிலும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
சிலர் பகிர்ந்தார்கள். பகிரும்படி கேட்டிருந்தார்கள்.
நானும் ஏதோ சொன்னேன். இன்னும் சொல்வேன்.
நீங்களும் உங்கள் பதின்ம வயது டயறியையும் பிரித்து பார்த்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன.
மாதேவி.
Saturday, February 27, 2010
Sunday, February 7, 2010
அம்பேவல ஹீரோயினின் குத்தாட்டம்
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இன ஆடுகள் குட்டிகள், காடாய்கள் தனித்தனியாக பாராமரிக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.
நெதர்லாந்து சாணன் இன வெள்ளாடுகள் இருந்தன. இவை ஏறத்தாள 40 கிலோவிலிருந்து 60 கிலோ வரை நிறை உடையன.
ஒன்று ஒன்றரை வருட காலங்களில் தாய்மையடையும் தன்மையன. வயிற்றில் சுமக்கும் காலம் 5 மாதங்களாகும்.
நீண்ட முடிகளுடன் கூடிய ஆடுகளும் இங்கு இருந்தன. அவை சிம்பு ஸ்டைலில் தாடி வைத்து தம்மை அழகுபடுத்தி்ப் பார்த்தன.
ஒழுங்கு பற்றி நிறையவே படித்திருந்தன. நாங்கள் இவைகளிடம்தான் கத்துக்கணும். கொம்புச் சண்டையெல்லாம் போடுக்கல.
இளம் ஆடுகள் ஒழுங்காக நின்று, கம்பி வேலிக்கு வெளியே போடப்பட்டிருந்த புற்களை தலையை நீட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
இணையத்தில் வரப்போறம் எனத் தெரிஞ்சிடிச்சுப் போல. வெள்ளாட்டார் மிடுக்கான தோற்றத்தில் நிற்கிறார்.
ஒருவருக்கு ஏனிந்தக் கோபமோ? யார் மேல்?
வீட்டுக்காரி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாவோ?
தனியே ஒரு மூலையில் சுவருடன்கொம்பை வைத்து மோதிக் கொண்டிருந்தார்.
நல்ல காலம் அடைத்திருந்ததால் நாம் தப்பினோம்.
நல்ல புத்திசாலி முகத்தைக் காட்டாமல் தனக்குக் கிடைத்த 'அடையாள அட்டையைக் காட்டி நிற்கிறார்.
சுவரில் ஏறிநின்று குதித்துக் கொண்டு என்னைப் பார்... ஒழுங்காகப் படங்கள் எடு என சர்க்கஸ் காட்டிக் கொண்டு நின்றார்.
கிளிக் .. கிளிக் செய்த பின்னர்தான் தனது ஆட்டம் யாவும் முடித்து சந்தோசமாகக் கீழே இறங்கி நின்றார்.
எப்படியெல்லாம் கற்று வைத்திருக்கிறார் நிறையக் குத்துப் பாட்டுக்கு ஆடுவார் போல்.
அடுத்த தமிழ்பட சான்ஸ் நிச்சயம் இவருக்குத்தான்.
மாதேவி
Wednesday, January 20, 2010
ஹொலிடே தீர சோர்ந்த மலர்கள்.
அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய குடில் இளைப்பாறும் இடம் போல அமைந்திருக்கிறது.
அருகே பட்ட மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பகுதி கைவிடப்பட்ட காவல் அரண்போல நிற்பது பார்க்க ரம்யமாக இருந்தது.
இலங்கையை மாங்காய் வடிவத்திற்கு ஒப்பிடுவர். பசுமையான தரையின் மத்தியில் இலங்கை வடிவில் ஒரு நீர்த் தேக்கம். அதற்குள் தீவு போல ஒரு நிலப்பரப்பு.
தீவுக்குள் மற்றொரு தீவா?
அந்தத் தீவிற்கு போவதற்கு ஒரு பாதை.
அனுமான் போட்ட கற் பாலம்போல என எண்ணத் தோன்றுகிறது.
விக்டோரியா பார்க்கில் பூப்பறிக்க முடியுமா? பறித்தால் தண்டம் போடுவார்களா தெரியாது.
கொழும்பு விலையோடு பார்க்கும்போது கொள்ளை மலிவு. ஆயினும் நிறைய வாங்க பர்சில் காசுத்தாள்கள் மலர்ந்து கொட்டுகின்றனவா?

கொழும்பிலிருந்து நுவரெலியா பார்க்கப் போனவர்களுடன் தொற்றிக் கொண்டு சில பூங் கொத்துகள் கொழும்பு பார்க்க வந்தன.



கொழும்பு பார்க்க மலர்ச்சியுடன் வந்த அவை சின்னுவின் பூச்சாடிக்குள் ஓரிரு நாள் சிலிர்த்திருந்து மறுநாள் முதல் அழுது வடியத் தொடங்கின.
ஆனாலும் எங்களுக்கு இன்னும் நாலு நாளாவது பார்திருந்தால்தான் ஆசை தீரும் போலிருந்தது.
அடுத்த விடுமுறைக்கு சின்னு விடுமுறையில் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல தலை விரித்து வாடி வதங்கிக் காத்திருக்கிறது.

மாதேவி
அருகே பட்ட மரத்தின் வெட்டப்பட்ட அடிப்பகுதி கைவிடப்பட்ட காவல் அரண்போல நிற்பது பார்க்க ரம்யமாக இருந்தது.
தீவுக்குள் மற்றொரு தீவா?
அனுமான் போட்ட கற் பாலம்போல என எண்ணத் தோன்றுகிறது.
பூ வாங்குவதற்கு என நகரத்தின் மையத்தில் உள்ள பஸ் நிலையத்தின் மத்தியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் பல கடைகளில் பூப் பூவாக கடை விரித்திருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் வாளிகளில் நிறம் நிறமாக பல்வேறு பூக்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.
கொழும்பிலிருந்து நுவரெலியா பார்க்கப் போனவர்களுடன் தொற்றிக் கொண்டு சில பூங் கொத்துகள் கொழும்பு பார்க்க வந்தன.
ஆனாலும் எங்களுக்கு இன்னும் நாலு நாளாவது பார்திருந்தால்தான் ஆசை தீரும் போலிருந்தது.
அடுத்த விடுமுறைக்கு சின்னு விடுமுறையில் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு என்பது போல தலை விரித்து வாடி வதங்கிக் காத்திருக்கிறது.
மாதேவி
Sunday, January 3, 2010
ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்
ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்.
ரோஜாக்களில் சிறிய இனத்தில் தொடங்கி இருபது அடி உயரம்வரை ஏறி வளரக்கூடிய இனங்களும் உண்டு.
நூற்றுக்கு மேற்பட்ட இனங்களுடன் பல வர்ணங்களில் செடிகளும் உள்ளன.
தென் இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து வந்த லத்தீன் சொல் ரோசா என்பது.
நடையும் துள்ளல் நடையாகி, சிரித்து மகிழ்ந்தபடியே உட் புகுந்தோம்.
பல வர்ண ரோஸாச் செடிகள் அழகாகக் கத்தரிக்கப்பட்ட மரங்களிலிருந்து பூத்துக்குலங்கின.
கிளைம்பர் இன ரோஜாக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. சிறிய மினி ரோஜாக்கள் மழலையாய் சிரித்தன.
புதிய இன ரோஜாக்கள் பெரிதாய் மலர்ந்து நின்று வா வா என அழைத்து மனத்தைகிறங்கடித்து நின்றன. இதில் பிங் நிறத்தாலான பூ எங்கள் எல்லோரின் அன்பையும் பிடித்துக் கொண்டது.
மிக நீண்ட நேரம் இனிய நறுமணத்தை நுகர்ந்து இன்புற்றோம்.
ரோஜா என்றதும் கருவி பாலகிருஷ்ணன் புன்னகை என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வந்தது.
புன்னகை
பூக்கள்தான் இந்த
பூவுலகை
நிறைக்கிறது.
ரோஜாக்களின்
புன்னகைதான் அதன்
முட்களை
மறைக்கிறது....
ரோஜாக்களைப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றோம்.
பதியமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிறிய பூச்செடிகள்,ஓக்கிற் மலர்கள்,பிகோனியாஸ் கிறீன்கவுஸ் இரண்டினுள்ளே நின்று கவர்ந்திழுத்தது.
விரைந்து சென்றோம் எங்கள் போதாதகாலம் மூடியிருந்தது. கவலையுடன் வெளியே சுற்றி வந்து ஆசையைத் தீர்த்துக்கொண்டு அப்பால் சென்றோம்.
அழகிய மரவேலைப்பாட்டுடன் இளைப்பாறுவதற்கான கொட்டேஜ் அமைக்கப்பட்டிருந்தது.
பாதியாக வெட்டப்பட்டிருந்த மூங்கில்குழாய்களில் பசளையிடப்பட்டு சிறிய பூக்கன்றுகள் மரக்குத்திகளின் மேல் இருந்து குடிலுக்கு மெருகு சேர்த்தது. சற்று இளைப்பாறி விட்டுத் தொடர்ந்தோம்.
சிறீலங்கா வரைபடம் போன்று கட்டப்பட்டிருந்த குளம் சுற்றிவர மரங்கள் நாட்டப்பட்டு குளத்தின் நடுவே நீரினிடையே பெரிய கற்கள் வைக்கப்பட்டிருந்தது.
குளத்தில் சிவப்பு, கறுப்பு பெரிய இனமீன்கள் துள்ளித் திரிந்தன. நடுவே கல்மேல் தாவிச்சென்று படம் எடுத்துக் கொண்டோம் புதிய அனுபவமாக இருந்தது.
மாதேவி
Thursday, December 17, 2009
நுவரெலியா விக்டோரியா பார்க்
நுவரெலியா Nuwara eliya நகரின் நடுமையமாக இருக்கும் விக்டோரியா பார்க் சென்றோம்.
சிறிய கார்டின் ஆக இருந்தாலும் அமைப்பில் அனைவரையும் ஈர்த்துக் கொள்ளும். வாசலில் ரிக்கற் பெற்று உள்ளே சென்றோம்.
வாசலிலேயே மிகப் பெரிய டெயிலியாஸ் பூக்கள் வெள்ளை,
ரோஸ், கத்தரிப்பூ,
இருபுறமும் வரிசையாக நாட்டப்பட்டு நின்று வரவேற்புக் கூறின.

வெள்ளை, கத்தரிப்பூ என இரு வர்ணம் கலந்த டெயிலியாஸ் புதிய இனமாகத் தோன்றியது. அதன் கலரில் சற்று நேரம் மனங்கிறங்கி மகிழ்ந்தோம்.
அழகில் மனமும் மகிழ்ந்து போயிற்று. லயித்து மாறிமாறிஅனைவரும் நின்று படம் எடுத்துக் கொண்டு தொடர்ந்தோம்.
அடுத்து கோலியாஸ் இன வர்ண இலைச் செடிகள் அழகூட்டி நின்றன.இத்துடன் செவ்வந்திப் பூக்கள் பாத்திகளில் அடுக்காய் மலர்ந்திருந்தது.
மணி வாழை கொத்தாய் பூக்களைத் தள்ளி நின்றது.
மணிவாழை போலவே பூக்களைக் கொண்ட மற்றொரு செடியில் மஞ்சள், ஓரேஞ் கலர்களில் அழகு விரித்திருந்தது.
அவற்றைத் தாண்டிச் சென்ற போது பெரிய அகண்ட சைப்பிரஸ் மரங்கள், அதனூடே பாலம். பாலத்தின் கீழ் ஓடும் நீரோடை என குளிர் காற்றும் தழுவ உடல் நடுக்கம் கொண்டது. சிலிர்த்துப் போய் ஜெர்சி அணிந்து கொண்டோம். இதமாக நடையைத் தொடர்ந்தோம்.
ஒரு புறம் பொட்டில் பிரஸ் மரங்களும்,
பெரிய காட்டு ரோஜா மரங்களும் பிங் நிறத்தில் பூவாய் பூத்து சொரிந்திருந்தன. நிலத்திலும் கொட்டிக் கிடந்தன.
அடுத்து அல்லிப் பூக்கள் பூத்துக்குலுங்கும் குளம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது,
அதற்கு எதிரே குமுதமலர்கள் நீரின்மேல்தலைகாட்டிநின்றன.
அதன் நடுவே பூவாய் விரிந்து தெறிக்கும் நீர் நாற்புறமும் தெளித்து சிதறியது. பாதையால் தொடர்ந்தோம் பெயர் தெரியாத மஞ்சள் பூக்கள்
சிவப்புப் பூக்கள், சிறிய செடிகளில் கூட்டமாய் நின்று கண்ணைப் பறித்தன.
அதையொட்டி பசிய புல்தரை மேலும் அழகைக் கூட்டியது.
பார்த்துக் கொண்டே மறுபுறம் செல்ல வெள்ளை நிற லில்லீஸ் பூக்கள் தலை உயர்ந்து நின்று பூத்து அழகு ஊட்டின. ஜப்பான் ரோஸ் என அழைக்கப்படும் பூக்களின் புதிய இனங்கள் தரையுடன் ஒட்டி முளைத்திருந்து ரோஸ், கத்தரிப்பூ வர்ணத்தில் பூக்களை குவித்திருந்தன.
பச்சைப் பசிய மரத்தை வளர்த்து வளைத்து வெட்டி உள்ளே வீடு போன்று அமைத்திருக்கிறார்கள் இதிலே பெஞ்சும் உள்ளது. இது சுற்றுலாப்பயணிகள் எல்லோரையுமே கவர்வதால் அனைவரும் புகைப்படம் எடுப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
நடுவே பூட் ஸ்டால் ஒன்று சிற்றுண்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. வர்ணப் பைக்கற் உணவுகள் தொங்கி நின்று சாப்பிட அழைத்தன.
அதைத் தொடர்ந்து புல்தரை பாரிய மரங்கள்.
இவற்றுடன் கூடிக் கிளைவிட்டு பரந்து நின்ற மரங்கள் நடந்த களைக்கு உட்கார்ந்து கால்களைத் தொங்கப் போட்டு இளைப்பாற இடம் கொடுத்தன.
அங்கே ஒரு குட்டிக் குருவி முறிந்த மரத்தின் கொப்பின் நுனியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார்.
சூழலுடன் இசைந்த அதன் கலர் கண்ணாம் மூஞ்சி காட்டியது. கண்டு பிடித்து ரசித்துக் கொள்ளுங்கள்
அவரைப் பார்த்ததும் எமக்கும் ஆசை பிறந்தது. சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு நடந்தோம். படமும் எடுத்துக்கொண்டோம்.
நீண்டகுளம் அதன் மேல்அழகிய உயர்ந்து வளைந்த பாலம் தென்பட கால்கள் அங்கே விரைந்து சென்றன.
பாலத்தில் ஏறிச் சுற்றுச் சூழலை ரசித்தோம்.
சடைத்த இளம் மூங்கில் மரங்கள் மஞ்சள் பச்சை நிறமாய் விரிந்து நின்று பசும் காட்டை நினைவூட்டியது.
Subscribe to:
Comments (Atom)

