Friday, April 19, 2013

கங்குல் கரைய கவி இனம் பாட


உலகில் வாழும் பறவை இனங்களில் அறிவுத் திறன் மிக்கது காகம்.  இவற்றில் உள்ள சிறப்பு அம்சம் எந்தப் பருவநிலையுள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை.

தென்னமெரிக்கா மற்றும் பெருங்கடலுக்கு அப்பால் காணப்படும் சிறு தீவுகளைத் தவிர உலகெங்கும் காணப்படும் பறவை இது.

குட்மோனிங்  இன்னுமா தூங்குகிறாய்

Carvidae (கார்விடே) குடும்பத்தைச் சார்ந்தது இது. இவற்றில் நாற்பது இனங்கள் இருக்கின்றன. பொதுவாக கரிய நிறம் கொண்டவை.

ஆனால் அரிதாக வெண் நிறக் காக்கைகளும் இருக்கின்றன.

Thanks :- www.tumblr.com
குப்பைகளையும் வீணான உணவுப் பொருட்களையும் உண்டு வாழும் பறவையினம்.

சுற்றுப்பற சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு இதற்கு இருக்கின்றது. 'தோட்டி' என்ற பெயரும் இதற்கு உண்டு.

வயல்களில் உள்ள பூச்சிகளையும் உண்பதால் 'உழவர்களின் நண்பன்' என்றும் அழைக்கிறார்கள்.

கொக்குகளுடன் நண்பனாக வயலில் பூச்சி புளு தேடல்

ஆசியாவில் பெரும்பாலும் இருப்பவை கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியவையே.

அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பிய இனங்கள் பலவும் இருக்கின்றன.

தமிழர் நம்பிக்கையில் விரத நாட்களில் காக்கைக்கு உணவிட்டு உண்ணும் பழக்கம் இருக்கின்றது. அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களும் காக்கைகளை கலாசாரத்தின் சின்னமாகவும் மூதாதையரின் அம்சமாகவும் கருதினார்கள்.

பஜ்ஜி சுட்ட ஓர்நாளில் அடுப்பில் வேகும் போதே மணத்தில் அடுக்களை பல்கனியில் வந்து கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள் இருவர். ஒருவர் பஜஜியுடன் ஓடிவிட்டார் மற்றவர் சாப்பிடுகின்றார்.  

சிவ பூசைக்காக அகத்திய முனிவர் கொண்டு வந்து கங்கை நீரை வைக்க விநாயகர் காகமாக உருவெடுத்து வந்து கமண்டலத்தைத் தட்டிவிட நீர் வழிந்து ஓடி காவிரி ஆறு ஆகியது என புராணங்கள் சொல்கிறது. காகங்கள் பற்றி இலக்கியத்திலும் வந்திருக்கின்றன.

தேங்காய் சாப்பிட ஆசையாக இருக்கு எனக்கும் தாவேன்

'கில்காமேஸ்'  என்ற நூல் காகங்கள் பற்றியது உலகின் பழமையான நூலாகக் கருதப்படுகின்றது. ஐரிஸ் புராணங்களின் படி காகங்கள் போர் மற்றும் இறப்பிற்கான 'மாரிகின்' என்ற கடவுளாகக் கருதப்படுகின்றது.

சனிபகவானின் வாகனமாகவும் கொள்கிறார்கள்.


மத்திய ஆசியாவில் முதன் முதலில் தோன்றியதாக கருதுகிறார்கள். பின்னர் வட அமெரிக்கா ஆபபிரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலிய நாடுகளுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

காக்கைகள் மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளவையாக இருக்கின்றன. இவை உணவைப் பகிர்ந்து உண்ணும் குணத்தை உடையன.
இருபது வருடங்கள் வரை உயிர் வாழக் கூடிய பறவை.
கூட்டாக உண்டு மகிழ்வோம்

பெண் காகங்கள் மூன்று வருடத்திலும், ஆண்காகாங்கள் ஐந்து வருடத்திலும் பருவமடைந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன.

Thanks :- commons.wikimedia.org

பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் பின்பே முட்டை இடுகின்றன. முட்டைகள் நீல பச்சைப் பின்னணியில் மண்நிறப் புள்ளிகள் கொண்டவையாக இருக்கும். நாலு ஐந்து முடடைகள் இடும்.

nature.gardenweb.com
முட்டை வெளி வந்து 6 வார காலத்தில் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கத் தயாராகிவிடும்.

அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த காகம் அதி கூடுதலாக முப்பது வருடங்கள் வாழ்ந்ததாக சொல்கின்றார்கள்.

கிளிகளைப் போல் காகங்களும் மனிதக் குரலில் பேசும் திறன் பெற்றவை எனச் சொல்லப்படுகிறது.

சொல்லேன் என்ன வாங்கித்தர ஜஸ்கிறீமா சோடாவா மைலோவா.

அமெரிக்க மீன்வள உயிரினங்கள் சேவை மையத்தில் தகவலின் படி
ஹவாயன் காகம், மரியனா காகம் உலகின் அழிந்து போன உயிரினங்களின் வகைகளில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளனவாம்.

இலங்கையில் 'காக்கைத் தீவு' என்ற இடமும் இருக்கின்றது.

பாலர் பாடல்களில், கதைகளில் காக்கையாருக்கு முக்கிய இடம் உண்டு.

'அண்டங்காக்கா கொண்டைக்காரி'... என்று பாடத் தோன்றுகிறதா.

நவீன கால புத்திசாலிக் காக்காவை பாருங்கள் ..........


0.0.0..0.

17 comments:

  1. இதுவரை காகம் குறித்து அறியாத பல
    அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி.

      உங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி.

      Delete
  2. காணொளி மிக அருமை......

    காகங்கள் பற்றிய தகவல்கள் நன்று....

    ReplyDelete
    Replies
    1. காணொளி எனக்கும் பிடித்திருந்தது அதனால் பகிர்ந்தேன்.

      நன்றி வெங்கட்.

      Delete
  3. மாதேவி காக்கையாரின் படங்கள் வரலாறுகள் அருமை.
    நவீன கால புத்திசாலிக் காக்காவின் கணொளி அருமை.
    மனிதர்களைவிட காகம் சாலை பாதுகாப்பை அழகாய் கடைபிடிக்கிறது. சாலை கடக்கும் பாதையில் அது கம்பீரமாய் நடந்து போவது மிக அழகு.
    வெள்ளை காக்கா அழகு. பஜ்ஜி வாசம் பிடித்து வந்து உங்களின் ருசியான பஜ்ஜியை ருசிக்கும் காக்காவும் அழகு.

    பகிர்வுக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கோமதி அரசு.
      அதுகளுக்கு இருக்கும் அறிவு நமக்கு இல்லை என்றுதான் தோன்றியது. என்ன மாதிரி காயை போட்டு உடைந்ததும் அது கம்பீரமாக நடந்து வரும் அழகே தனிதான்.

      உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.

      Delete
  4. காக்கைகளைப்பற்றி நல்லதொரு அலசல். அழகான படங்களுடன் பல்வேறு விஷயங்களை அறிய முடிந்தது. சுற்றுச்சூழலுக்கும் உதவுகின்றன. காவிரி நதி பாய உதவியது. சனீஸ்வர பகவானின் வாகனம், பல நாட்டுக்கலர் காக்கைகள் என பல தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி . வருகைக்கு மகிழ்கின்றேன்.

      Delete
  5. அருமையான பதிவு.
    ரசனையுள்ள அழகான புகைப்டங்களுடன்
    வாழ்த்துக்கள்

    கலைஞர் மு. கருணாநிதி பராசத்தியில் எழுதி
    சி.எஸ். ஜெயராமன் பாட
    சிவாஜி நடித்தது ஞாபகம் வந்தது.

    "கா கா கா கா கா கா
    ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
    அன்போடு ஓடிவாங்க என்ற
    அனுபவப் பொருள் விளங்க - அந்த
    அனுபவப் பொருள் விளங்க - காக்கை
    அண்ணாவே நீங்க அழகான வாயால்
    பண்ணாகப் பாடுறீங்க.."

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சிவாஜியின் ரசிகர் போலும் நன்றாக ரசித்து பாடலை தந்திருக்கின்றீர்கள்.

      நன்றி.

      Delete
  6. // உலகில் வாழும் பறவை இனங்களில் அறிவுத் திறன் மிக்கது காகம். //

    காக்கை குருவி எங்கள் ஜாதி – என்று பாடினான் பாரதி. காக்கை பற்றி பல தகவல்கள்.

    // 'கில்காமேஸ்' என்ற நூல் காகங்கள் பற்றியது உலகின் பழமையான நூலாகக் கருதப்படுகின்றது. //

    'கில்காமேஸ்' நூல் கிடைத்தால் வாங்கி படிக்க வேண்டும். ஒரு சிறப்பு தகவல் தந்து இருக்கிறீர்கள். நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாரதி பாடலை மறக்கமுடியுமா நினைவூட்டியதற்கு நன்றி.

      நுர்ல் படிக்கும் உங்கள் ஆர்வத்தை நினைத்து மகிழ்கின்றேன்.

      வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றி.

      Delete
  7. நவீன கால புத்திசாலிக் காக்காவின் கணொளி அருமை.

    என்ன சாமர்த்தியம் ..என்ன அறிவு .. ரசிக்கவைத்தது ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவற்றின் புத்திசாலித் தனத்தை நினைத்து நாங்கள்தான் வியந்துபோய் இருக்கின்றோம்.

      நன்றி.

      Delete
  8. காகம் பற்றி இவ்வளவு தகவல்களா!நன்று

    ReplyDelete
  9. காகம் பற்றிய தொகுப்பு மிக நன்று. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete