Sunday, November 21, 2010

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ... மின்னேரியா சரணாலயத்தில்.....

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பறவைகள் தமது வாழ்விடங்களை மாற்றிக் கொள்ளும். அதி குளிர் காலங்களில் பனிப் பிரதேசங்களில் வாழும் பறவைகள் வெப்பவலயப் பிரதேசங்களுக்கு பல மைல்கள் கடந்து செல்லும்.

இயற்கையின் வனப்பான ஓவியமாக..

ஆயிரக் கணக்கில் கூட்டாக இடம் பெயரும். அப்பொழுது பல சிரமங்களையும் அவை சந்திக்க நேரிடும். நீண்ட நாட்களுக்கு உணவு அருந்தாமல், தொடர்ந்து பறந்து செல்ல வேண்டியும் நேரிடும்.

பெரும் கடல்கனைத் தாண்டும்போது தரிக்காது தொடர்ந்து செல்லும். பறக்கும் காலத்திற்கு முன்பே நிறைய உணவுகளைச் சாப்பிட்டு கொழுப்பைச் சேமித்து வைத்திருக்கும். அதிலிருந்து பறப்பதற்கான சக்தியைப் பெற்றுக்கொள்ளும்.

சிந்து பாடும் பறவைகள் நாம் திருடித் தின்ன வருகிறோம்.
 சேறு நிறைந்த களிமுகப் பகுதிகள், நீர்த் தேக்கங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள், பாறைகள் நிறைந்த கரையோரங்கள், நீர் நிலைகளை அண்டிய மரக் கூடல்கள், என இரைகள் ஏராளமாகக் கிடைக்கும் இடங்களில் குடிபுகும்.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தங் கொண்டாடுதே...
இக்காலத்தில் இணையத் தேடி, முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சுகளை வளர்த்து அவை பறக்கும் வயது வர காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மீண்டும் தமது பழைய இடம் நோக்கிப் பயணிக்கும்.

தங்கமீனே தங்கமீனே மொறுமொறு சோளப் பொரி நான் தருவேனே
சில பறவைகள் பறக்கும்போது எங்கும் தரிக்காமல் தொடர்ந்து 4500 கிலோ மீற்றர் வரை பறக்கக் கூடியவை.பசிபிக்கில் உள்ள பொன்நிற உப்புக் கொத்தி இவ்வகையானது.

காத்திருந்து நொந்தேனே, வயிறு வற்றிப் போனதிங்கே
பெரும்பாலும் தொடர்ந்து காலம் காலமாக ஒரே இடத்தில் வந்து தங்கும். அதனால் இவற்றின் வாழும் இடங்களை சிதைக்காமல் காப்பது எமது கடமையாகும். பறவைகள் தங்கிச் செல்ல சரணாலயங்களை அமைத்து அவற்றைப் பாதுகாக்கவும் வேண்டும்.

காதலர் இருவர் ஊடலில் முகம் திருப்பினரோ?
இலங்கையில் பறவைகள் சரணாலயம் குமணவில் அமைந்துள்ளது.

மீனைக் குறி வைக்கும் கழுகுக் கண்ணர்
பறவைகள் தூங்கும்போது தமது சிறகுகளை சிலிர்த்துக் கொண்டு உப்பலாக வைத்துக் கொள்ளும். அதனால் இறகுகளுக்குள் காற்றுப் புகுந்து உடல் வெப்பம் வெளியே செல்லாதபடி தடுக்கும். குளிரிலிருந்தும் இவற்றைக் காக்கும்.

பென்குயின் பறவை கடல் நீரையும் பருகும்.  பறவைகள் சில பறக்கும்போதே தூங்கும். ஆல்பர்ட்றாஸ் பற்வைகள் இவ்வகையன. புறா அதிகமாக நீர் அருந்தும். மிகச் சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு. பென்குயின், கிவி பஸ்டா பறக்க முடியாத பறவைகளுக்குள் அடங்கும்.

நீலவண்ண பறவையார் பட்ட மரத்தில் மீன் கொத்தக் காத்திருக்கிறாரோ?

மின்னேரியாவில் வெளிநாட்டுப் பறவைகள் வெள்ளை நிறத்தை உடையனவாய் சிறகுகளில் கறுப்பு பற்றிக் அடித்ததுபோல இருந்தன. இவற்றின் சொண்டும்,கால்களும் மஞ்சள் நிறத்தனவாய் காணப்பட்டன. அவை செட்டையை விரித்துப் பறக்கும்போது மிகவும் கவர்ச்சி உடையனவாக இருந்தன.

வானம் வசப்படுகிறது இவர்கள் சிறகடிப்பில்
வெள்ளை, மஞ்சள், கறுப்பு, சாம்பல் நிறங்களில் கொக்கு, நாராய்கள் சிலவும் இருந்தன. Open bills, Painted strokes, Ducks, King fisher, owls, falcon, Shore birds இனங்கள் பெரும்பாலும் இங்கு காணப்பட்டன. சுமார் 160 இன வகையான பறவைகள் இங்கிருப்பதாக அறியத் தெரிகிறது.
 

பல பறவைகள் நதியோரம் நதியோரம் எம்மைச்சுற்றிப் பறந்தன.
பறவைகள் என்றதும் பாடல்களும் நினைவில் பறக்கிறதே…

சிறுவர் பாடல் ஓன்று

அந்திசாயும் நேரம் ஆசையாக நண்டு கவ்வுகிறார்
வாய்க்காலிலே வெள்ளம்
வாத்து இரண்டும் குள்ளம்
மூக்கிலே கறுப்பு
முதுகு கொஞ்சம் பழுப்பு
வண்ணத் தேரென நடந்து செல்லும் காட்டுக் கோழியார்

சினிமாப் பாடலில் பிரபல்யமாக இருந்த பாடல்கள் சில
‘கொக்கு பற பற
கோழி பற பற
குயிலே பற பற….”

“சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கு குக்கு கூ... கூ...”

பழைய பாடல் ஒன்று
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…”

தனிமையிலே இனிமை காணும் கறுத்தச் செட்டையார்

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்…… 


இது எங்க வீட்டுச் சின்னு மயில்....

விழாவில் மயிலாட்டம் போடுகிறாள்.

மின்னேரியா வனவிலங்கு சரணாலய காட்சிகள் கொண்ட எனது ஏனைய பதிவுகள்.



மின்னேரியா தேசிய வனத்தில் நாம்.

யானைகள் மத்தியில் நாம் ...

யானைச் சவாரியும் 'அலியாக் கடே யானை' யும்

மாதேவி

Sunday, November 7, 2010

யானைச் சவாரியும் 'அலியாக் கடே யானை' யும்

காட்டைவிட்டு வெளியேற மனமின்றி மெதுவே வெளியே வந்தோம். சிங்காரப் பட்டு உடுத்தி எழிலாய் ராஜா நின்றார்.  பட்டுக் குடை, ஆலவட்டம் வெண்சாமரம் மட்டும் குறைந்திருந்தது. எல்லோரும் அவரைநோக்கி ஒரே ஓட்டமாய் சென்றோம்.
எழிலாய் உடுத்திய ராஜா

அவர் மேலே ஏறுவதற்கு ஓர் இடத்தில் மரத்தாலான ஏணிப்படிகள் கட்டி வைத்திருந்தார்கள். படிகளின் மேல் ஏறிச்சென்று இவர் மேலிருக்கும் கூட்டில் அமர்ந்து சுற்றுலா வரலாம்.


இருபுறமும் அடர்ந்த மரங்கள் வளர்ந்து நிழல் தரும் பாதையால் இனிய பயணம் செல்லலாம். சலசலத்து ஓடும் ஆற்றையும். தண்ணீர் தெறிக்கக் கடந்து சென்று சுற்றிலாகவமாகக் காட்டி வருவார்.

தோப்புகளுடான குறும் பாதையில்
பிள்ளைகள் ராஜாவில் ஏறி அமர்ந்து மகிழ்ச்சியாய் சென்றனர். நாங்கள் அவரை அடி ஒற்றிச்  சென்று வந்தோம். எமக்கு நடைப் பயிற்சியுடன் புதிய அனுபவமாகவும் இருந்தது.

வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகளும் விரிந்த தோப்புகளும் இருந்தன. தோப்புகளில் தென்னை பலா இலைகளை வெட்டிக் குவித்து இவருக்கு உணவாக வைத்திருப்பதைக் கண்டோம்.

வழியில் முயல், கிளி, குருவிகள், கோழி வளர்ப்பு பாம் ஒன்றும் இருந்தது. பாம் வேலியில் உள்ள கொடியின் கொத்துப்பூவில் தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார்கள், அழகான செட்டை அடித்துத் திரிந்தனர். ஒருவர் அகப்பட்டார்.

தேனருந்தும் வண்ணத்துப் பூச்சியார்
உலாச் செல்லும் பிள்ளைகளை பின் தொடர்ந்து சென்றோம். எதிரில் இன்னொரு பட்டு உடுத்திய ராஜாவில் வெளிநாட்டு இளம் ஜோடி உலாச்சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதனையும் கண்டு கழித்தோம்.

சவாரிக்கு ஏறும் ஏணிப்படிகளுக்கு அருகே
பட்டுராஜாவுடன் நாங்கள் கிளிக்கிய படம்..

ராஜாவைக் கெடுக்க வேண்டாம் என்று எங்களை  ஹா… ஹா வெட்டிவிட்டேன்.

ராஜாவுக்குக் கொடுத்த வரவேற்பு தனக்கு இல்லையா என ஜீனியர் ஹோர்லிக்ஸ் குடித்து வளரும் எங்கள் வீட்டுப் பஞ்சுக் குட்டியார் நானே பெரியவன் என சேர்க்கஸ் போட்டுக் காட்டுகிறார்.

பஞ்சுக் குட்டி யானையார்

உண்மையில் பெரியவர் அமைதியாகச் சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

பெரியவர் மிகவும் பிரபல்யமானவர். நீண்ட காலமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். எல்லோர் வாயிலும் புகழ்ந்து அழைக்கப்பட்டு வந்தவர். தன்னடக்கமாக நிற்கிறார்.

அவரின் பரம்பரை வரலாறு மிகவும் பிரபலமான ஒரு அழகிய நகரத்தில் நடுநாயமாக இருந்த மார்க்கற் கடையில் ஒய்யாரமாக முன்னே இருந்து வருபவர்கள் அனைவரையும் Welcome கூறி வரவேற்றவர்.

அவரின் பெயராலேயே கடைப் பெயரும் அழைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் அவரின் புகழை. “அலியாக் கடே” என அழைக்கப்பட்டது. அலியா என்றால் யானை. கடே என்றால் கடை. “யானைக் கடை” என்றே அழைத்தனர் மக்கள். வயது 90 + வருடங்கள்.

“அலியாக் கடே” யானை

கடையில் வீற்றிருந்தவர் 70-75 வயதில் ஓய்வு பெற்று எங்கள் வீட்டில் குடி புகுந்தார். முன்பு மாதந்தோறும் மாதேவி கையால் முழுகாட்டப்பட்டு ஒளி வீசியவர் பிரிந்த சோகத்தில் இப்படி ஆகிவிட்டார்.

தற்போது அண்ணா வீட்டுப் பறனில் வாழ்க்கை.

ஊர் சென்ற போது வெளியே அழைத்து கொட்டகையில் கட்டிவிட்டேன்.

மாதேவி