Friday, March 1, 2013

தெஹிவல மிருகக் காட்சிசாலையில் பறவையினங்கள்

இலங்கையின் தேசிய மிருகக் காட்சிச்சாலை தெஹிவலவில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த மிருகக் காட்சிச்சாலைகளுள் இதுவும் ஒன்றாக அடங்குகிறது.


 "நானேதான் முகப்பு வாயில் ரிக்கட் வாங்கிட்டு வாங்கோ!"

பலவகை இன மிருகங்களும், பறவைகளும் ,ஊர்வனவும், மீனினங்களும்,வண்ணத்துப் பூச்சிகளும் இங்கு இருக்கின்றன. நகர்ப்புறத்திற்கு சற்று ஒதுக்குப் புறமாக இயற்கையுடன் கூடிய பசிய சூழலில் தாழ் உயர் பிரதேசங்களுடன் அமைந்திருப்பது மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றது.

John hagenbeckம என்பவரால் 1920 ல் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டது. மிருக சேர்கஸ் நடத்தும் குடு்ம்பத்தவர் இவர். ஜேர்மனியிலுள்ள தனது சகோரனுக்கு மிருகங்களை ஏற்மதி செய்த இவர் அதில் உழைத்த பணத்தைக் கொண்டு 5 ஏக்கரில் இருந்த இவ்விடத்தை 11 ஏக்கராக விஸ்தரித்தார்.

.
 "மிருகங்களைப் பார்க்கிறவங்கள் என்னை மறந்திட்டாங்கள்."

 இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தின்போது 1939ல் மூடப்பட்டது. காரணம் ஜேர்மனியராக இருந்ததால்  பின்னர் Neil weilman  என்பவரே முகாமையாளராக இருந்தார். இக்காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது.

படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்களில் இப்பொழுது 23 ஏக்கருள்ள பரந்த நிலப்பரப்பாக விஸ்தீரணம் அடைந்துள்ளது. நிறைந்த மிருகங்களை வைத்துப் பராமரிக்கின்றார்கள். எத்தனை தடவைகள் சென்று பார்த்தாலும் சலிப்பதே இல்லை.


"காதலர்களும் ஜோடிகளாக குடும்பங்களும் கூட்டமாக என நிழலில் தஞ்சம்"

அழகிய சிறு சிறு பூந்தோட்டங்களும் மரநிழல் பாதைகளும் சிறுபாலங்களும் அமைந்திருந்து கவர்ச்சி ஊட்டுகின்றன. விருட்சங்களில் படரும் கொடிகள், சிறுநீரோடைகள் குளிர்ச்சி தருகின்றன. இங்குள் தாவரங்களில் பல மருத்துவத் தாவரங்களாகும்.

மிருகங்களின் சாகசக் காட்சிகளும் நடாத்தப்படுகின்றன.


"யானை டான்சுக்கு நேரம் இருக்கு. இங்கை இவ என்னத்திற்கு காத்திருக்கிறா?"

கடற்சிங்கம், சிம்பன்சி யானை நடனம், என்பனவும் இங்கு மாலை நேரங்களில் நடாத்தப்படுகினறன. யானை குதிரைகளில் சவாரியும் செய்யலாம்.

நாங்கள் சென்ற மாலை மழை இருள் மூடி இருந்தது. அதனால் படங்கள் தெளிவாக இல்லை. அப்புறம் மழையும் பொழியத்தொடங்கியதால் எல்லா இடங்களையும் பார்க்க முடியவில்லை. எடுத்த படங்களை  பகிர்கின்றேன்.

முதலில் பறவை இனங்களை கண்டுகளிப்போமே.


"மற்றவர்கள் வருவதற்கிடையில் சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்குகிறேன்."


"நானும் தொப்பி போட்டால் எப்படி இருக்கும்"


 "நான ஒளித்தும் பாதி படத்தில் சிக்கிவிட்டதே"


" நான்தான் ஹீரோயின்"


"சாம்பல் நிறமென்பதால் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லையோ?"


 "விஸ்வரூபம் பார்த்துவிட்டீர்களா? நான்தான் வெல்வேன்"

 "நீலச்சடடை வாங்கித் தரவில்லை என டூ விட்டுவிட்டாள்"


 "அவள் முன்னே நான் எப்பொழுதும் தலையாட்டும் பொம்மைதான்"


 "உப்புப் புளி இல்லாத அவளின் சாப்பாட்டைவிட இதற்குள் ஏதாவது ருசியாகக் கிடைக்கும்"


"எனது அழகுக்கு ஏற்ற ஜோடி இன்னமும் கிடைக்கவில்லை."
 

"காத்திருங்கள் இன்னமும் சில நாட்களில் சொக்கிளட் தருவோம்"


"என்னைக் கும்பிட கழுகுமலைக்கு வரவேண்டாம். இங்கேயே கும்பிடு போடுங்கள்"


 "நான் முடி சூடிய கிளியோபாட்ரா இராணியாக்கும்"


 "இவள் இங்கு வந்து என அழகைக் கெடுக்கிறாள்"


 "சோம்பேறிப் பசங்கள் காற்று வாங்குறாங்கள். நான் சாப்பிடப் போறன்"

" என்ரை கரண்டிதான் நீளம். இதாலைதான் குழம்பு அள்ளலாம்"


 "ஓட்டப் போட்டிக்கு நான தயார். யார் போட்டிக்கு வாறீங்கள்"


 மயிலக்கா அழகுப் போட்டிக்கு வருகிறாயா?


"அழகு கெட்ட இவளைக் கட்டி வைத்த அப்பனை என்ன செய்யலாம்?" 



"சுத்திப் பார்த்துக் களைத்துப் போனேன் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாறன்"

நீங்களும் காலாறிவிட்டு வாங்கோ. பார்க்க இன்னமும் நிறைய இருக்கு. கெதியா வரவேணும்"

மாதேவி