Friday, March 1, 2013

தெஹிவல மிருகக் காட்சிசாலையில் பறவையினங்கள்

இலங்கையின் தேசிய மிருகக் காட்சிச்சாலை தெஹிவலவில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பழமை வாய்ந்த மிருகக் காட்சிச்சாலைகளுள் இதுவும் ஒன்றாக அடங்குகிறது.


 "நானேதான் முகப்பு வாயில் ரிக்கட் வாங்கிட்டு வாங்கோ!"

பலவகை இன மிருகங்களும், பறவைகளும் ,ஊர்வனவும், மீனினங்களும்,வண்ணத்துப் பூச்சிகளும் இங்கு இருக்கின்றன. நகர்ப்புறத்திற்கு சற்று ஒதுக்குப் புறமாக இயற்கையுடன் கூடிய பசிய சூழலில் தாழ் உயர் பிரதேசங்களுடன் அமைந்திருப்பது மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றது.

John hagenbeckம என்பவரால் 1920 ல் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டது. மிருக சேர்கஸ் நடத்தும் குடு்ம்பத்தவர் இவர். ஜேர்மனியிலுள்ள தனது சகோரனுக்கு மிருகங்களை ஏற்மதி செய்த இவர் அதில் உழைத்த பணத்தைக் கொண்டு 5 ஏக்கரில் இருந்த இவ்விடத்தை 11 ஏக்கராக விஸ்தரித்தார்.

.
 "மிருகங்களைப் பார்க்கிறவங்கள் என்னை மறந்திட்டாங்கள்."

 இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தின்போது 1939ல் மூடப்பட்டது. காரணம் ஜேர்மனியராக இருந்ததால்  பின்னர் Neil weilman  என்பவரே முகாமையாளராக இருந்தார். இக்காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது.

படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றங்களில் இப்பொழுது 23 ஏக்கருள்ள பரந்த நிலப்பரப்பாக விஸ்தீரணம் அடைந்துள்ளது. நிறைந்த மிருகங்களை வைத்துப் பராமரிக்கின்றார்கள். எத்தனை தடவைகள் சென்று பார்த்தாலும் சலிப்பதே இல்லை.


"காதலர்களும் ஜோடிகளாக குடும்பங்களும் கூட்டமாக என நிழலில் தஞ்சம்"

அழகிய சிறு சிறு பூந்தோட்டங்களும் மரநிழல் பாதைகளும் சிறுபாலங்களும் அமைந்திருந்து கவர்ச்சி ஊட்டுகின்றன. விருட்சங்களில் படரும் கொடிகள், சிறுநீரோடைகள் குளிர்ச்சி தருகின்றன. இங்குள் தாவரங்களில் பல மருத்துவத் தாவரங்களாகும்.

மிருகங்களின் சாகசக் காட்சிகளும் நடாத்தப்படுகின்றன.


"யானை டான்சுக்கு நேரம் இருக்கு. இங்கை இவ என்னத்திற்கு காத்திருக்கிறா?"

கடற்சிங்கம், சிம்பன்சி யானை நடனம், என்பனவும் இங்கு மாலை நேரங்களில் நடாத்தப்படுகினறன. யானை குதிரைகளில் சவாரியும் செய்யலாம்.

நாங்கள் சென்ற மாலை மழை இருள் மூடி இருந்தது. அதனால் படங்கள் தெளிவாக இல்லை. அப்புறம் மழையும் பொழியத்தொடங்கியதால் எல்லா இடங்களையும் பார்க்க முடியவில்லை. எடுத்த படங்களை  பகிர்கின்றேன்.

முதலில் பறவை இனங்களை கண்டுகளிப்போமே.


"மற்றவர்கள் வருவதற்கிடையில் சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்குகிறேன்."


"நானும் தொப்பி போட்டால் எப்படி இருக்கும்"


 "நான ஒளித்தும் பாதி படத்தில் சிக்கிவிட்டதே"


" நான்தான் ஹீரோயின்"


"சாம்பல் நிறமென்பதால் ஒருவருக்கும் என்னைப் பிடிக்கவில்லையோ?"


 "விஸ்வரூபம் பார்த்துவிட்டீர்களா? நான்தான் வெல்வேன்"

 "நீலச்சடடை வாங்கித் தரவில்லை என டூ விட்டுவிட்டாள்"


 "அவள் முன்னே நான் எப்பொழுதும் தலையாட்டும் பொம்மைதான்"


 "உப்புப் புளி இல்லாத அவளின் சாப்பாட்டைவிட இதற்குள் ஏதாவது ருசியாகக் கிடைக்கும்"


"எனது அழகுக்கு ஏற்ற ஜோடி இன்னமும் கிடைக்கவில்லை."
 

"காத்திருங்கள் இன்னமும் சில நாட்களில் சொக்கிளட் தருவோம்"


"என்னைக் கும்பிட கழுகுமலைக்கு வரவேண்டாம். இங்கேயே கும்பிடு போடுங்கள்"


 "நான் முடி சூடிய கிளியோபாட்ரா இராணியாக்கும்"


 "இவள் இங்கு வந்து என அழகைக் கெடுக்கிறாள்"


 "சோம்பேறிப் பசங்கள் காற்று வாங்குறாங்கள். நான் சாப்பிடப் போறன்"

" என்ரை கரண்டிதான் நீளம். இதாலைதான் குழம்பு அள்ளலாம்"


 "ஓட்டப் போட்டிக்கு நான தயார். யார் போட்டிக்கு வாறீங்கள்"


 மயிலக்கா அழகுப் போட்டிக்கு வருகிறாயா?


"அழகு கெட்ட இவளைக் கட்டி வைத்த அப்பனை என்ன செய்யலாம்?" 



"சுத்திப் பார்த்துக் களைத்துப் போனேன் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாறன்"

நீங்களும் காலாறிவிட்டு வாங்கோ. பார்க்க இன்னமும் நிறைய இருக்கு. கெதியா வரவேணும்"

மாதேவி

30 comments:

  1. படங்கள் அழகு...

    கருத்துரைகள் படு ஜோர்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      ரசனைக்கு மகிழ்கின்றேன்.

      Delete
  2. ரம்யமான காட்சிகளை பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அண்மையில் போனதில் பகிர்ந்தேன்.

      Delete
  3. வெகு அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. படங்களும் கட்டுரையும் மிகவும் ரம்யம்.

    ReplyDelete
    Replies
    1. ரம்யம் என்றே சொல்லிவிட்டீர்கள் :)

      மகிழ்ச்சி.

      Delete
  5. அத்துணை பறவைகளும் அருமை

    ReplyDelete
  6. ரம்யமான தெஹிவல மிருககாட்சிசாலைக்கு அழைத்து சென்று அங்குள்ள பறவைகளை கண்டு களிக்க செய்தமைக்கு நன்றி மாதேவி.

    ReplyDelete
    Replies
    1. வண்டலூர், அடுத்தது கோயம்புத்துர்ர் என நினைக்கின்றேன் பார்த்திருக்கின்றேன்.

      எங்கள் நாட்டில் சிறிய இடம்.
      வருகைக்கு நன்றி .

      Delete
  7. தெளிவான, அழகான நீ்ஙகள் எடுத்த படங்களை ரசித்து வந்த அதேநேரம் ஒவ்வொன்றுக்கும் ரசனையும், நகைச்சுவை உணர்வும் ததும்ப நீங்கள் தந்துள்ள அடிக்குறிப்புகளும் அபாரம். மழைத் தூறலுடன் பறவைகளை ரசிப்பது என்பது அருமையான விஷயம். நல்ல க்ளைமேட்டில் பாத்திருக்கீங்கன்னு புரியுது. அதை எங்களுடனும் பகிர்ந்துக்கிட்டது டபுள் சந்தோஷம். நன்றி மாதேவி!

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஊட்டம் போட்டு உற்சாகப் படுத்தியுள்ளீர்கள்.

      கம்பி வலைகளுக்குள்ளால் படங்கள் எடுப்பது சிரமமாகத்தான் இருந்தது.மிருகங்களும் உன்முகத்தை பார்க்கமாட்டேன் என ஓடிவிடும்.

      மிக்கநன்றி பால கணேஷ்.

      Delete
  8. 40 வருடங்களுக்கு முன் சென்றுள்ளேன். தீக்கோழியும், பஞ்சவர்ணக் கிளிகளுமே ஞாபகம் உள்ளன.
    //"அழகு கெட்ட இவளைக் கட்டி வைத்த அப்பனை என்ன செய்யலாம்?" //
    ரசித்தேன்.
    கம்பி வலையுள் படம் பிடிக்கும் சிரமம் அறிவேன். எனினும் படங்கள்
    நன்றே!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் யோகன் பாரிஸ்.

      எத்தனை தடவைகள் சென்றாலும் புதிதாக பார்ப்பதுபோன்ற உணர்வையே தருகின்றது.

      ரசனைக்கு மகிழ்கின்றேன். வருகைக்கு நன்றி.

      Delete
  9. அழகான படங்கள்,பொருத்தமான சுவையான கமெண்ட்டுகள்.பறவைகள் எல்லாம் அழகு(ஆந்தையும்தான்!)

    ReplyDelete
    Replies
    1. பறவைகள் என்றாலே அழகானவைதான்.

      மிக்கநன்றி குட்டன்

      Delete
  10. பறைவைக் காட்சி,புகைப்படத்தில் ,அருமை.பொருத்தமான வர்ணனைகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சென்னைப் பித்தன்.

      Delete
  11. எத்தனை தடவைகள் சென்றாலும் தெவிட்டாத இடம்.
    அருமையான புகைப்படங்களுடன் நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. வாருங்கள் டொக்டர். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பலதடவைகள் சென்றிருப்பீர்கள் எனத்தோன்றுகிறது.

    உங்கள் வேலைக்கு மத்தியிலும் ரசிப்பது மகிழ்ச்சியே.

    நன்றி.

    ReplyDelete
  13. படங்களும் அதற்கேற்ற கமெண்ட்ஸும் பிரமாதம். நாங்கள் உங்க கூடவே தான் வருகிறோம்...

    ReplyDelete
  14. மிக நன்று. என்றோ பார்த்தது. நினைவு படுத்த முடிந்தது.
    மிக்க நன்றி மாதவி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. தங்களது வலைப்பதிவை இன்றைய வலைச்சரம் (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_9.html ) வலைப்பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளேன். காண்க.

    ReplyDelete
  16. singapore birds park

    http://priyamudan-prabu.blogspot.com/search/label/birds%20park

    ReplyDelete
    Replies
    1. வருகின்றேன் பார்க்க. நன்றி.

      Delete
  17. நன்றி பிரியமுடன் பிரபு.

    ReplyDelete
  18. தெஹிவலவை நேரில் பார்த்த உணர்வு கிடைக்கிறது. ஒரு கேள்வி: நீங்கள் கடைசியாக எப்போது போனீர்கள்? மயில்கள் தோகை விரித்து ஆடியதை எப்போதாவது கண்டீர்களா? படம் இருந்தால் வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      மூன்று மாதங்களுக்கு முன்தான் போயிருந்தேன்.

      எத்தனையோ தடவை சென்றிருந்தபோதும் ஒருதடவை மட்டும் மயில் நன்கு தோகை விரித்து ஆடியதைக் கண்டிருக்கின்றோம். படமும் எடுத்திருந்தோம். இப்பொழுது கைவசம் இல்லை.

      Delete